ஏசியுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் என்னாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இப்போது பல வீடுகளில் ஏசி அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்னும் பல மக்களுக்கு ஏசியை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதில் குழப்பங்கள் இருக்கிறது. எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவாக குழப்பங்களில் ஒன்று, AC பயன்படுத்தும் பொழுது அந்த அறையில் உள்ள சீலிங் ஃபேனை பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக் கூடாதா என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது.
ஏசி மற்றும் சீலிங் ஃபேன் இரண்டையும் ஒன்றாக பயன்படுத்துவது ஒரு வகையில் சிறந்த குளிர்ச்சியை (cooling) அனுபவிக்க உதவும் என்று டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஃபேனில் இருந்து வரும் காற்று, ஏசியில் இருந்து வரும் காற்றை விட வேகமாக இருப்பதனால், இது அறையில் உள்ள வெப்ப காற்றை வேகமாக வெளியேற்ற உதவுகிறது. இதனால், உங்கள் அறை உடனே குளிர்ச்சியடைகிறது.
ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. ஆனால் அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும். உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் 6 மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் 12 யூனிட் செலவாகும். ஆனால் ஏசியுடன் மின்விசிறியும் பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.