சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்.. சென்னைக்கு அருகே உள்ள டாப் 5 முருகன் கோயில்..!!

temple 1 2

சென்னையில் உள்ள முருக பக்தர்கள் எளிதில் சென்று வழிபடுவதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த முருகன் கோவில்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.


சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்: சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில், கோல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தலம், சமீப காலமாக மிகுந்த புகழ் பெற்றுவருகிறது. செவ்வாய்கிழமைகளில் இக்கோவிலுக்கு சென்று, சொந்த வீடு கட்ட வேண்டி வேண்டிக்கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் அந்த கனவு நனவாகும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது வெறும் நம்பிக்கை அல்ல. ஏராளமானோர் இங்கு வேண்டியதற்குப் பிறகு சொந்த வீடு கட்டி மகிழ்ந்துள்ளனர். இதனால், நாளுக்கு நாள் இந்த தலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குன்றத் திருமலை முருகன்: முருகன் இங்கு சிறிய குழந்தை வடிவில், கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். மற்ற முருகன் கோவில்களைவிட வித்தியாசமாக, இங்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி பெரியவர் முன்கூட்டியே இங்கு முருகன் கோவில் அமைவது குறித்து கண்ணறிவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் குன்றை சீர்செய்யும் போது, மலையின் உச்சியில் வேல் ஒன்று கிடைத்ததை அடையாளமாகக் கொண்டு, முதலில் அதையே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின் சிலை பிரதிஷ்டை செய்து, இன்று ஒரு முழுமையான கோவிலாக திகழ்கிறது.

கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி: சென்னை பாரிமுனை அருகே அமைந்துள்ள இந்த அரிய தலத்தில், முருகனே தாம் அமர விரும்பிய இடத்தில் பீடமின்றி எழுந்தருளியுள்ளர். இது தான் கந்தகோட்டம் முருகன் கோவில். வேலைக்காக தோண்டிய குழியில் கிடைத்த முருகன் சிலையை அந்த பக்தர் எடுத்துக் கொண்டு செல்லும் போது, வழியில் இந்த இடத்தில் சிலையை வைத்துள்ளார். மீண்டும் இந்த இடத்தில் இருந்து முருகனின் சிலையை அகற்ற முடியவில்லை. முருகனே விரும்பி வந்து அமர்ந்த இடம் என்பதால் இங்கு பீடம் ஏதும் இல்லாமலேயே முருகன் காட்சி தருகிறார். தரையில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இந்த தல முருகனை வழிபட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விலகி விடும்.

பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோவில்: சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும், புகழ்பெற்ற அஷ்டலட்சுமி கோவிலுக்கும் அருகில் அமைந்துள்ளது அறுபடை முருகன் கோவில். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அனைவராலும் தரிசனம் செய்ய முடியாது. இந்த குறை தீர ஒரே வளாகத்தில் ஆறு படை முருகனுக்கும் தனி சன்னதி இல்லாமல் தனி கோவிலாகவே கட்டி உள்ளனர். ஆறு படை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோவில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனையும் வழிபட்ட பலனை பெற முடியும்.

பக்தர்களின் வாழ்வை மாற்றும் வடபழநி ஆண்டவர்: சென்னையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற, அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகவும் இருப்பது வடபழநி முருகன் கோவிலாகும். ஆரம்பத்தில் முருகனின் படம் மட்டும் வைத்து வழிபட்டு வந்த நிலையில், பிறகு கோவில் அமைக்கப்பட்டது. தென் பழநியின் செய்வதாக வேண்டிக் கொண்ட காணிக்கை, வேண்டுதலை இந்த கோவிலில் நிறைவேற்றலாம். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து, பலருக்கும் குலதெய்வமாக இருப்பதால் இத்தல முருகனை வடபழநி ஆண்டவர் என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.

Read more: பார்க்கும் இடமெல்லாம் மனித உடல்கள் சிதறி கிடந்தது.. நேரில் பார்த்தவர் கதிகலங்கி சொன்ன வார்த்தை..!!

Next Post

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம், இனி லாக்-இன் டெபாசிட்களாக வைக்க முடியாது!. புதிய கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி!.

Fri Jun 13 , 2025
வெளிநாட்டு நாணய வைப்புகளில் பணத்தை வைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Liberalised Remittance Scheme (LRS) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டின் முடிவில் ஏற்படும் அதிகளவான வெளிநாட்டு நாணய அனுப்புதல்களை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு நாணயத்தில் லாக்-இன் காலத்துடன் கூடிய […]
RBI 11zon

You May Like