ராமர் வழிபடப்படும் இந்த கிராமத்தில் ஹனுமான் பெயரை சொல்லக் கூட தடை.. ராமாயண காலம் முதல் கோபத்தில் இருக்கும் மக்கள்.. ஏன்?

1593764413 bowoshsm

இந்தியாவில் ராமர் வணங்கப்படும் இந்த கிராமத்தில், ஹனுமான் பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது.

கலியுகத்தில் அதிகம் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராக ஹனுமான் இருக்கிறார்.. ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும் ஹனுமான் கோயில் இருப்பதை நாம் பார்க்கலாம்.. ஆனால் இந்தியாவில் ஹனுமான் என்ற பெயரை உச்சரிப்பது தடைசெய்யப்பட்ட ஒரு இடம் உள்ளது.


ஆம்.. இந்தியாவில் ராமர் வழிபடும் ஒரு கிராமத்தில் ஹனுமானை வணங்க தடை செய்யப்பட்டுள்ளது.. இங்கு ஹனுமானுக்கு எந்த கோயிலும் இல்லை, அவரது பெயரை யாரும் பயன்படுத்துவதில்லை. இங்கு ஹனுமான் பக்தர்கள் யாரும் இல்லை, இது மட்டுமல்ல, இங்குள்ள மக்கள் ஹனுமான், பஜ்ரங், மற்றும் மாருதி போன்ற பெயர்களையும் தவிர்க்கிறார்கள், ஆனால் ஏன் தெரியுமா?

இதன் பின்னணியில் உள்ள கதை ராமாயண காலத்துடன் தொடர்புடையது. உத்தரகண்ட் மாநிலம் சாமோலியில் துரோணகிரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், ஹனுமான் ஜி என்ற பெயரை உச்சரிப்பது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு ஹனுமான் சிலையோ அல்லது கோயிலோ இல்லை. இங்கு ராமர் வழிபடப்படுகிறார், ஆனால் இங்கு வசிப்பவர்கள் ராமாயண காலம் முதல் இன்று வரை ஹனுமான் மீது கோபமாக உள்ளனர். இங்குள்ள மக்கள் ஹனுமானை வணங்குவதில்லை.

ராவணனுடனான போரில் லட்சுமணன் மயக்கமடைந்தபோது, ஹனுமான் சஞ்சிவனி மூலிகையைப் பெற இந்த கிராமத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மூலிகையை தேடும் போது, ஹனுமானுக்கு எந்த மூலிகையை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனவே அவர் லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற முழு மலையையும் தூக்கிச் சென்றார், ஏனெனில் சஞ்சிவனி மூலிகை மட்டுமே லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற முடியும்.

ஆனால் ஹனுமானின் இந்த செயலை உள்ளூர் தெய்வமான லது தேவதா மன்னிக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மலையை வேரோடு பிடுங்குவதற்கு முன்பு உள்ளூர் தெய்வத்திடம் ஹனுமான் அனுமதி பெறவில்லை என்றும், அந்த நேரத்தில் தங்கள் தெய்வம் தியானத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

ஆனால் ஹனுமான் மலை தெய்வத்தின் வலது கையை வேரோடு பிடுங்கி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக இன்றும் இங்குள்ள மக்கள் ஹனுமான் மன்னிக்கவில்லை.. இதனால் தான் இங்குள்ள மக்கள் ஹனுமானை வணங்கவோ அல்லது அவரது பெயரை கூட உச்சரிப்பதோ இல்லை..

Read More : மஹாபுருஷ ராஜ யோகம்.. இந்த ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போகும் குருபகவான்.. திடீர் ஜாக்பாட்…

RUPA

Next Post

ஷாக்!. ராயல் கரீபியன் கப்பலில் 140 பேர் மர்ம நோயால் பாதிப்பு!. தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு!

Sat Jul 19 , 2025
சர்வதேச ராயல் கரீபியன் பயணக் கப்பலில் இருந்த 140க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நேவிகேட்டர் ஆஃப் தி சீஸ் கப்பல், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெக்சிகோ இடங்களுக்கு பயணம் செய்து வருகிறது. 3,380 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில், 17 பார்கள், 12 […]
Royal Caribbean ship mysterious illness 11zon

You May Like