வருமான வரி ITR தாக்கல் செய்வது தொடர்பாக இந்தாண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அனைத்து ஆவணங்களும், விவரங்களும் சோதனை செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்திற்கும் மேல் வீட்டு வாடகை இருந்தால், நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியாக உள்ளதா என சோதனை நடத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டும் முதலீடுகள் உண்மையானதா என்று முறையாக ஆய்வு செய்யப்படும். நீங்கள் லோன் உள்ளதாக காட்டப்படும் கணக்குகள் குறித்தும் சோதனை செய்யப்படும்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய வருமான வரி ITR இன்று தான் தொடங்கியுள்ளது. ITR தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் பார்ம் 16 சம்பளதாரர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பல சம்பளதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து படிவம் 16 அல்லது TDS சான்றிதழைப் பெற காத்திருக்கின்றனர்.
படிவம் 16 என்பது ஒரு முக்கியமான TDS சான்றிதழ் ஆகும். அதாவது, ஒரு நிதியாண்டில் பணியாளருக்கு செலுத்தப்பட்ட சம்பளம், மூலத்தில் வரி விலக்கு பெறத் தேர்ந்தெடுத்த வரி முறை மற்றும் ஊழியர் சம்பள வருமானத்தில் இருந்து கோரிய விலக்குகள் பற்றிய விவரங்கள் அதில் அடங்கும். எந்தவொரு நிறுவனமும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் படிவம் 16 வழங்குவது கட்டாயமாகும். இதை சரியான நேரத்தில் வழங்கத் தவறினால், தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 500 அபராதம் அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்படும்.