கொரோனா நோய் தொற்று பாதிப்பு விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,93,390 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து, இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 5,31,893 என பதிவாகி இருக்கிறது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,983 என பதிவாகி இருக்கிறது.
இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,44,59,514 பேர் இந்த நாய் தொட்டியில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். இந்த நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த விகிதம் 98.81% ஆக இருக்கிறது. தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையில் 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.