இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது…
சூரத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… விமானம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..
சூரத் விமான நிலையத்திலிருந்து மாலை 4:40 மணிக்கு புறப்படவிருந்த 6E-7485 விமானத்தில் பயணிகள் ஏற்கனவே ஏறியிருந்தனர், அப்போது விமான நிலைய ஊழியர்கள் பின்புற சரக்கு கதவு கைப்பிடி அருகே, தேனீக்கள் கூட்டமாக இருப்பதைக் கவனித்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
ஊழியர்கள் ஆரம்பத்தில் புகையைப் பயன்படுத்தி தேனீக்களின் கூட்டத்தை கலைக்க முயன்றனர், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. நிலைமை தீர்க்கப்படாததால், விமான நிலைய தீயணைப்புப் படை உதவிக்கு அழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தேனீக்களை அகற்ற உயர் அழுத்த நீர் ஜெட்களைப் பயன்படுத்தினர். இதை தொடர்ந்து விமான நிறுவன ஊழியர்கள் அந்த விமானத்தில் மீண்டும் பொருட்களை ஏற்றி, இறுதி பாதுகாப்பு சோதனைகளை முடித்தனர்…
பின்னர் இந்த விமானம் இறுதியில் மாலை 5:26 மணிக்கு புறப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமானது. இந்த தாமதம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது, பல பயணிகள், பாதுகாப்பு குறித்து கவலைகளையும், பிரச்சினை தீர்க்கப்படும் வரை தார் சாலையில் நீண்ட நேரம் காத்திருப்பது குறித்து விரக்தியையும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து இண்டிகோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் இன்னும் வெளியிடவில்லை.
Read More : இனி இரவு நேர அன்னப் பிரசாதத்திலும் வடை.. திருப்பதி தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு..