10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களே….! இன்று முதல் இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்….!

பொதுத்தேர்வுக்கு இன்று முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கடந்த 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு ரூ.1,000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத்துறையின் இ-சேவை மையங்கள் குறித்த விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

ஷாக் நியூஸ்..!! மக்களே 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி..!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Thu Jan 5 , 2023
மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பி.எஃப். 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மேற்குவங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
corona

You May Like