தீவிரமடையும் பருவமழை..!! 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், பத்தணம்திட்டா ஆகிய 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று முதல் நான்கு நாட்கள் கேரளா முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! விலை அதிகரிக்குமே தவிர இனி குறையாதாம்..!! தக்காளி விலையால் தவிக்கும் மக்கள்..!!

Wed Jul 12 , 2023
தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவ்வப்போது ஒரு சில நாட்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து […]
tomatoes prices in India 619cda46aaabf

You May Like