நடப்பாண்டுக்கான ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அணிகள் மற்றும் வீரர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. முழுவிவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வெகுவிமர்சியாக தொடங்கிய ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. இதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தவகையில், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இறுதிப்போட்டிக்கு பிறகு விருது மற்றும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த சீசனில் 2ஆவது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
பிற பரிசு விவரங்கள்: இறுதிப்போட்டியின் எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர்: அஜிங்க்யா ரஹானே (சிஎஸ்கே) – ₹1 லட்சம், இறுதிப்போட்டியின் கேம் சேஞ்சர்: சாய் சுதர்சன் (குஜராத்) – ₹1 லட்சம், இறுதிப் போட்டியின் மதிப்புமிக்க வீரர்: சுதர்சன் – ₹1 லட்சம், இறுதிப் போட்டியில் அதிக தூரத்திற்கு சிக்ஸர்: சுதர்சன் – ₹1 லட்சம், இறுதிப் போட்டியின் சிறந்த கேட்ச்: எம்எஸ் தோனி (சிஎஸ்கே) – ₹1 லட்சம், ஆட்டநாயகன் – டெவோன் கான்வே (சிஎஸ்கே) – ₹5 லட்சம் வழங்கப்பட்டது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய டெவான் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.ராஜஸ்தா ராயல்ஸ் அணியின் தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அந்த விருதை பெற்றுக் கொண்டார். 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 625 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்துள்ளார். இந்த விருதுக்கு அவருக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கேம் சேஞ்சருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த 2 விருதுகளுக்கும் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.12 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 17 போட்டிகளில் விளையாடியுள்ள கில் 690 ரன்கள் வரையில் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் வைத்துள்ளார். 890 ரன்கள் குவித்துள்ளார். 3 சதம், 4 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது சராசரி 59.33. அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
சிறந்த பந்து வீச்சாளரான ரஷீத் கானிற்கு கேட்ச் ஆஃப் தி சீசனுக்கான விருது வழங்கப்பட்டது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஃபேர்பிளே விருது வழங்கப்பட்டது.குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் வென்றுள்ளார். பர்பிள் கேப் வென்ற முகமது ஷமிக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா அணியின் சார்பாக ரன்னர் அப் விருதை பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளமிங் அணியின் சார்பக வெற்றி பெற்றதற்கான விருது பெற்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் கிளென் மேக்ஸ்வெல், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.ஆர்சிபி அணியின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 115 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்ததற்காக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வென்றுள்ளார். மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தா ஈடான் கார்டன்ஸ்க்கு பிட்ச் மற்றும் மைதானத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதில், அவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஐபிஎல் தொடரில் சில சாதனைகள்: இந்த சீசனில் மட்டும் 1,124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 36 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 2,174 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளன. இந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (129 ரன்கள்) அடித்தவராக சுப்மன் கில் உள்ளார். இந்த சீசனில் முகமது ஷமி மட்டுமே அதிகபட்சமாக 193 டாட் பால்கள் வீசியுள்ளார். இறுதிப் போட்டியில் குஜராத் அணி எடுத்த 214 ரன்கள் தான் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த சீசனில் 37 முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.