ஈரான் – இஸ்ரேல் போர்.. தமிழர்களை காக்க முதலமைச்சர் உத்தரவு.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

MK Stalin dmk 6

இஸ்ரேல், ஈரானில் வசிக்கும் தமிழர்களின் விவரங்களை பெற்று உதவிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 13 அன்று இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்று பெயரில் ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் விளைவாக அங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்துவின் கீழ் ஈரானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேல், ஈரானில் வசிக்கும் தமிழர்களின் விவரங்களை பெற்று உதவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத்துறையை தமிழர்களின் விவரங்களை பெற்று உதவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24*7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 011 24193300 என்ற லேண்ட்லைன் எண்ணும், 92895 16712 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் tnhouse@tn.gov.in procofficetnh.@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் இருக்கும் தமிழர்கள், இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ஈரான் – இஸ்ரேல் மோதல்.. நேபாளம், இலங்கைக்கும் உதவிக்கரம் நீட்டும் இந்தியா.. அதிரடி அறிவிப்பு..

English Summary

Chief Minister Stalin has ordered assistance in obtaining details of Tamils ​​living in Israel and Iran.

RUPA

Next Post

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு..

Sat Jun 21 , 2025
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் […]
1358436

You May Like