உக்கிரமடைந்த ஈரான் – இஸ்ரேல் போர்!. மெஹ்ராபாத் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்!. கொளுந்துவிட்டு எரியும் பகீர் காட்சி!.

mehrabad airport

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 52,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.


15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் – ஹமார் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்தார். மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது. மேலும், இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஈரானுக்கு வான்வழி தாக்குதல் மிகவும் அவசியமானது என்பதால், இஸ்ரேல் அதனை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஈரானின் தலைநகர், டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மெஹ்ராபாத் விமான நிலையம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Readmore: திக்!. திக்!. கடலுக்கு மேல் அதிசயம்!. உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள் இவைதான்!.

KOKILA

Next Post

நோட்..! ஜுன் 26-ம் தேதி அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்...! உடனே இதை‌ செய்ய வேண்டும்...!

Sat Jun 14 , 2025
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 26.06.2025 அன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு […]
post 2025

You May Like