” நான் என்ன செய்யப் போறேன்னு யாருக்கும் தெரியாது.. ஈரான் குறித்து டிரம்ப் பேச்சு!

iran trump says 11zon

“ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் தாமதமாகிவிட்டது ” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி மையங்களை இலக்காகக் கொள்ளவோ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் “அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்ற சூழ்நிலை, இப்போது இருந்ததற்கும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறினார். மேலும் “நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்று பேசியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் மோதல் எவ்வளவு காலம் தொடரும் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும், ஈரானின் வான் பாதுகாப்பு “அழிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

ஈரானின் அணுசக்தி நோக்கங்களில் டிரம்ப் அவநம்பிக்கை: அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு திட்டத்தைப் பற்றிய அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அதாவது, ஈரான் தனது அணு திட்டத்துடன் மோசமான நோக்கங்களை கொண்டுள்ளது என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்,”வாழ்த்துக்கள்” என்று கூறினார், மேலும் தெஹ்ரானுடன் தனது நிர்வாகத்தின் பொறுமை குறைந்துவிட்டதாகவும் கூறினார். இஸ்ரேலுடனான ஈரானின் தீவிரமடைந்து வரும் மோதலுக்கு மத்தியில் “பொறுமை ஏற்கனவே தீர்ந்து விட்டது” என்று அவர் கூறினார்.

கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்று எனக்கு தெரியும்: இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும், ஆனால் அவர் “இப்போதைக்கு” கொல்லப்படுவதை விரும்பவில்லை என்று டிரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார். இருப்பினும், ஐந்து நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஈரான் “நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

Readmore: “பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி; போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு என்பதே இல்லை”!. பிரதமர் மோடி!.

KOKILA

Next Post

துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு...!

Thu Jun 19 , 2025
நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் […]
Tn School students 2025

You May Like