ரயில்வே துறையில் பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெற்கு மண்டலத்தில் மொத்தம் 64 விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) – 64
வயது வரம்பு: அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
* ஐஆர்சிடிசி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை அல்லது ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் அறிவியல் துறையில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், சமையல் கலை, சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை போன்ற துறைகளில் BBA / MBA / M.Sc. பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பதாரர்கள் 2024-ம் ஆண்டுக்கு முன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
* விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூரி மொழிகளில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்: ஐஆர்சிடிசி பணி வாய்ப்புகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பணியுடன் தொடர்புடைய இதர செலவினங்களும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் (Walk-in Interview) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, தொழில்நுட்ப அனுபவம் மற்றும் தனிப்பட்ட திறன்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து இறுதி தெரிவு செய்யப்படும்.
நேர்காணல் விவரம்: இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது.
- நவம்பர் 15, 2025 – தரமணி CIT வளாகம்
- நவம்பர் 18, 2025 – திருவேற்காடு மாநில ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனம்
நேர்காணலுக்கு செல்பவர்கள் https://www.irctc.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும். அதனுடன், மேலும், 3 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும். தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வர வேண்டும்.



