அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அந்தவகையில், பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கடுகு எண்ணெயை புளித்த மோரில் கலந்து தலையின் முடிக் கால்களில் தேய்த்த பிறகு சீயக்காய் தூள் தேய்த்து அலச பொடுகு தொல்லை நீங்கும்.
கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும்போது அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.
கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 30 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். பின்னர் இந்த எண்ணெயை தலையில் நன்கு தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு, நுனி முடி வரை இந்த எண்ணெயை தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். இதற்கடுத்து மறுநாள் காலையில் எழுந்து மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை சுத்தம் செய்யவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி எப்போதும் ஆரோக்கியமாக நன்கு வளரும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்து அதில் முட்டையை சேர்த்து இந்த கலவையை நன்கு கலக்கவும். இப்போது அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து தலைமுடியில் சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு, முடியை ஷாம்பு தடவி சுத்தம் செய்ய வேண்டும். இதனை ஒரு மாதத்திற்கு 2-3 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதனால் கூந்தலை பட்டுப் போல மாறும்.
கடுகு எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும். கூந்தல் நன்கு பட்டுப் போன்று, இருப்பதற்கு, கடுகு எண்ணெய்யை தயிருடன் கலந்து, தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.