“தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை என்பதால், மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த வகையான கொரோனா வீரியம் குறைந்தது என்பதால் பயப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஏற்கனவே இதுதொடர்பாக பேசியுள்ளோம். தற்போது வரை பெரியளவில் பாதிப்புகள் இல்லை. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பாதிப்பு அதிகமானால், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தற்போதைய சூழலில், எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மேலும், தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை என்பதால், மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Read More : உங்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வேணுமா..? அப்படினா இந்த வேலையை முதலில் முடிங்க..!! புது ரூல்ஸ்..!!