ஏர் இந்தியா விமானத்தில் இப்படி ஒரு சம்பவமா..? குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபரை ‘நோ-ஃப்ளை’ பட்டியலில் சேர்க்க விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்கா-டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி மீது, ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் வணிக வகுப்பு கேபினில் நடந்த இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 26, 2022 அன்று நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பயணியை விமானம் பயண தடை பட்டியலில் சேர்க்க விமான நிறுவனம் பரிந்துரைத்தது.

ஏர் இந்தியா விமானத்தில் இப்படி ஒரு சம்பவமா..? குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா ஒரு உள் குழுவை அமைத்து, அந்த நபரை ‘நோ-ஃப்ளை லிஸ்டில்’ சேர்க்க பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் அரசாங்கக் குழுவின் கீழ் உள்ளதால் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என கூறினார்.

CHELLA

Next Post

#கோவை: தொடரும் பெண் மர்ம மரணம்.. ஈஷா யோகா மையத்தை இடிக்க வலியுறுத்தல்..!

Wed Jan 4 , 2023
கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது.  கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]
n4585028381672810647593326583409cbec81663d907df8b3badd80ba710d60913fc9e351655d1c4e7d444

You May Like