கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பத்தில், சேலம் – சென்னை புறவழிச்சாலை பகுதியில் அதிமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது பலத்தை காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேடையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு உற்சாகமடைந்த நிர்மலா பெரியசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், “இங்கே கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகும், அண்ணா திமுக பலவீனமாக இருப்பதாக யாராவது சொன்னால், அவர்களை வெட்டிப் போடுங்கள்” என ஆவேசமாக தெரிவித்தார். ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரே, பொதுமேடையில் வன்முறையை தூண்டும் வகையில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் நாகரிகம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை மீறி, பகிரங்கமாக வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் நிர்மலா பெரியசாமி பேசிய இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மாற்றுக் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Read More : உங்கள் ரேஷன் கார்டு Active ஆக இருக்கிறதா..? உடனே செக் பண்ணுங்க..!! இல்லைனா ரூ.3,000 பணம் கிடைக்காது..!!



