ஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தப்படுகிறதா..? தலைமைத் தேர்தல் அலுவலர் பரபரப்பு பேட்டி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறுகையில், ’ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பான காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதால் சி – விஜில் செயலி மூலமாக புகார்களை அனுப்பலாம். இந்த செயலி மூலமாக ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.


சி – விஜில் செயலி மூலமாக அனுப்பினால் அனுப்புபவரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது. ஈரோடு கிழக்கில் சட்டம் – ஒழுங்கு சுமூகமான முறையில் உள்ளது. பல புகார்கள் வந்தாலும் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கூறி இதுவரை புகார் எதுவும் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார்கள் குறித்தும் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..!! யூடியூப் சேனல் தொடங்க தடை..!! மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

Mon Feb 20 , 2023
கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி, சம்பாதித்து வருகின்றனர். இந்த யூடியூப் சேனல் மூலம் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறையில் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ஒரு […]
best vpn for youtube thumb800

You May Like