ரத்தாகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு…..? பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை…..!

தமிழகத்தைப் பொறுத்த வரையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக தொடங்கி இருக்கிறது.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு தலைமை ஏற்கின்றார் 11ம் வகுப்பு பாடங்களை நடத்தாமலேயே சில பள்ளிகள் 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தியதால் 11ம் வகுப்பு பொது தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்களுக்கு சுமை அதிகரித்து வருவதால் தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Next Post

இன்னும் 6️ நாட்களில் ஓய்வு பெற உள்ளேன்……! ஆனால் இதில் மட்டும் திருப்தி இல்லை சைலேந்திரபாபு வருத்தம்…..

Sat Jun 24 , 2023
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற 30 ஆம் தேதியுடன் இருவருமே பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, இறையன்புவுக்கு […]
SylendraBabu facebook 26092021 1200

You May Like