ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியா..? புதிய சட்டத்திருத்தம்..!! தேர்தல் ஆணையம் அதிரடி

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், அதே தேர்தலில் வேறு தொகுதியிலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால், அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது தோல்வியை தவிர்க்க இரு தொகுதிகளில் போட்டிடுவது வழக்கம். ஒரு தொகுதியில் தோற்றாலும், மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என போட்டியிடுவர்.

ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியா..? புதிய சட்டத்திருத்தம்..!! தேர்தல் ஆணையம் அதிரடி

இதுகுறித்து மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது, ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதால், மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் செலவு இரு மடங்காக உயர்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு, தேர்தல் விதிமுறைகள் சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

CHELLA

Next Post

வங்கிக் கணக்கில் இருந்து மாயமாகும் பணம்..!! இப்படியும் மோசடியா..? எஸ்பிஐ வங்கி திடீர் எச்சரிக்கை..!

Fri Oct 7 , 2022
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பண மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி […]
1089256 sbiloan

You May Like