ஆவினில் பால் தட்டுப்பாடா..? அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!! மக்களே கவனம்..!!

ஆவினில் பால் தட்டுப்பாடு என்பது தவறான தகவல் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.


அண்மையில் ஆவின் பால் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் ஒன்று செய்திருந்தார். அதில், ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனவும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஆரஞ்சு நிற பாலின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் நாசர், ”ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனும் கருத்தில் உண்மை இல்லை. மாறாக பால் விற்பனை அதிகரித்துள்ளது தான் உண்மை. தேவைக்கேற்ப பூர்த்தி செய்யும் வகையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.12 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் ரூ.70-க்கு விற்கப்படும் நிலையில், ஆவினில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

ஆவினில் பால் தட்டுப்பாடா..? அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!! மக்களே கவனம்..!!

பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்தபட்சமாக ரூ.10 ஆவின் பால் குறைவானதே. அதுவும் அட்டைதாரர்களுக்கு ரூ.46 என்ற விலையில் தான் தற்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது. வாணிப நோக்கு விற்பனைக்கு மட்டுமே ரூ.60 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய நீல நிறம் மற்றும் பச்சை நிற பால் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் குறைக்கப்பட்ட விலையிலேயே விநியோகித்து வருகிறோம்” என்றார்.

CHELLA

Next Post

தலைநகரில் உடனே அமலுக்கு வரும் கட்டுப்பாடு...! மத்திய அரசு தகவல்...!

Mon Dec 5 , 2022
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் […]
1600x960 311411 central government

You May Like