திருவண்ணாமலையில் இப்படி ஒரு கோயிலா..? அமாவாசை நாளில் கண்டிப்பா போயிட்டு வாங்க..!! மாற்றம் நிச்சயம் நிகழும்..!!

Melmalaiyanr Amman Temple 2025

திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், அதன் சக்தி வாய்ந்த வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழாவுக்கு புதிய தேர் உருவாக்கும் அரிய பாரம்பரியத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழக்கத்திற்கு காரணம் ஒரு சுவாரசியமான புராண கதைதான்.


புதிய தேர் செய்வதற்கான புராண காரணம் :

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஆதியில் 5 தலைகள் இருந்தன. இதன் காரணமாக அவர் அகங்காரத்துடன் யாரையும் மதிக்காமல் இருந்தார். பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக, சிவபெருமான் தனது சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். இதன் விளைவாக, சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. வெட்டப்பட்ட மண்டை ஓடு (கபாலம்) சிவனின் கையை ஒட்டிக்கொண்டது. கையில் கபாலத்துடன், உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு சிவன் ஊர் ஊராக திரிந்தார்.

இந்நிலையில், அவர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அன்னை அங்காள பரமேஸ்வரி, சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, அந்த சாதத்தை கீழே சிதறும்படி செய்தார். கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்க முற்பட்டபோது, அம்மன் உடனடியாக விஸ்வரூபம் எடுத்து, அந்தக் கபாலத்தை காலால் மிதித்து அடக்கினார். இதனால் சிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

கபாலத்தை அடக்கிய பிறகும் அம்மனின் கோபம் தணியாமல் இருந்ததால், மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேவர்கள் மற்றும் முனிவர்களை கொண்டு தேர்த் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேவர்களும் முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மண்டபமாகவும், மரப்பலகைகளாகவும் மாறி நின்றனர்.

பின்னர், அன்னை அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்தத் தேரில் அமர்ந்து வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலா முடிந்ததும், தேவர்களாக மாறியிருந்த அனைவரும் மீண்டும் தங்கள் பழைய நிலைக்கு திரும்பினர். இந்த ஐதீகத்தின்படிதான், மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவத்தின் போது, ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் முடிந்தவுடன், தேரை முழுவதுமாகப் பிரித்துவிடுவார்கள். அடுத்த வருடத் திருவிழாவிற்கு மீண்டும் புதிதாகத் தேர் உருவாக்கப்பட்டு, அதில் அம்மன் உலா வருவார்.

கோவிலின் சிறப்புகள் :

இந்த சக்தி வாய்ந்த கோவிலில் அமாவாசை தினங்களில் குறி சொல்லும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பேய் பிடித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு கபால தீர்த்தம் வழங்கப்படுகிறது. கற்பூரத்தைக் கொளுத்திக் கொடுத்ததும், அதை வாயில் போடும் பெண்கள் அமைதியாகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இக்கோவிலின் காவல் தெய்வமாக பாவாடை ராயர் அருள்பாலிக்கிறார்.

Read More : கல்வி ஞானம் அருளும் புதுக்கோட்டை ஆவுடையார் கோவில்.. இத்தனை சிறப்புகளா..?

CHELLA

Next Post

ஈக்வடார் சிறைச்சாலையில் பயங்கர கலவரம்!. கொத்துக்கொத்தாக பலியான கைதிகள்!. 31 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி!.

Tue Nov 11 , 2025
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு […]
ecuador prison riot

You May Like