இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காலந்தர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் சேர்ந்தவர் ராம அங்கரி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜீவ்லி தேவியுடன் லிவிங்கில் இருந்து வந்துள்ளார். ராம அங்கிரிக்கு வயது 95. ஜீவ்லி தேவிக்கு வயது 90. இருவரும் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் முறையில் வாழ்ந்துள்ளனர். ராஜஸ்தான் பழங்குடி மக்களிடம் நடா என்ற கலாச்சாரம் நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது.
அதன்படி ஒரு ஆணும், பெண்ணும் அதிகாரப்பூர்வ திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து கணவன் – மனைவியாக வாழலாம். சமூகமும் அவர்களை ஏற்றுக் கொள்ளும். இப்படி பல வருடங்கள் ஒன்றாக வாழும் முறை அங்கு இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. ராம அங்கரி – ஜீவ்லி தேவியும் அப்படித்தான். இவர்களுக்கு தற்போது 4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர்.
இந்நிலையில், ராம அங்கரி – ஜீவ்லி தேவிக்கும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். அவர்களின் ஆசையை வாரிசுகளும், உறவுகளும் நிறைவேற்றி வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம அங்கரி – ஜீவ்லி தேவி தம்பதி 70 வருட வாழ்க்கைக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
சம்பிரதாயத்துக்காக என்றில்லாமல் அனைத்து சடங்குகளையும் முறையாக கடைபிடித்து மிகப்பெரிய கொண்டாட்டமாக இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். திருமணத்துக்கு முந்தைய நாள் ஆட்டம், பாட்டம் என்று மொத்த ஊரும் இந்த நிகழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். லிலிங் முறையில் இருந்தாலும், அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு தந்தையின் அனைத்து சொத்துகளிலும் பங்கு சென்றுவிடும்.
அதேசமயம், பெண் குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை மாற்றுவதற்காக அதிகாரப்பூர்வ திருமணம் செய்து, பெண்களின் உரிமைக்கு வலுசேர்ப்பதற்காகவும், இந்த திருமணத்தை உள்ளூர் வாசிகள் விழிப்புணர்வாக பயன்படுத்தி வருகின்றனர்.
Read More : அப்படிப்போடு..!! கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஆர்பிஐ..!! நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்துவதாக அறிவிப்பு..!!