ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். தற்போது பல அரசுப் பணிகளிலும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அல்லது அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்கள், அடிக்கடி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை பலமுறை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போது குடும்பத் தலைவர் மிக எளிதாக செய்து முடிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல், ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக் கொள்ளலாம். புதிய விதிகளின்படி, ஒருவர் குடும்பத் தலைவரின் (HOF) ஒப்புதலுடன் ‘My Aadhaar’ போர்ட்டலில் தனது முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. குடிமக்களின் பெற்றோரின் பெயர், கணவன் அல்லது மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு இது வசதியாக இருக்கும். ஆதாரில் ஆன்லைனில் குடும்பத் தலைவரின் பெயரை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி இங்கே காணலாம்.

  • அங்கு அப்டேட் அட்ரஸ் டேபுக்குச் செல்லவும்.
  • இப்போது குடும்பத் தலைவரின் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணைச் சரிபார்த்த பிறகு தேவைப்படும் சான்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • வெற்றிகரமான ரூ. 50 பரிவர்த்தனைக்குப் பிறகு, உங்களுக்கு சேவைக் கோரிக்கை எண் அனுப்பப்படும். மேலும், குடும்பத் தலைவர் முகவரிக் கோரிக்கை பற்றிய அலர்டை SMS மூலம் பெறுவார்.
  • அலர்ட் கிடைத்த 30 நாட்களுக்குள் மை ஆதார் போர்ட்டலில் சைன் இன் செய்து கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், கோரிக்கை செயல்படுத்தப்படும்.

CHELLA

Next Post

இன்சூரன்ஸ் பணத்திற்காக யாரோ ஒருவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு..!! பலே திட்டம் தீட்டிய தம்பதி..!! சிக்கியது எப்படி..?

Thu Jan 19 , 2023
இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கார் டிரைவரை கொலை செய்து காருடன் தீயிட்டு கொளுத்துவிட்டு, புனேவுக்கு ஓட்டம் பிடித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் வெங்கடாபுரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி அன்று, குளக்கரை அருகே எரிந்த நிலையில் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரது சடலமும் இருந்தது. பின்னர், காரில் இருந்த அடையாளங்களை வைத்து போலீசார் விசாரித்ததில், இறந்தவர் வெங்கடாபுரம் கிராமத்தை […]
இன்சூரன்ஸ் பணத்திற்காக யாரோ ஒருவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு..!! பலே திட்டம் தீட்டிய தம்பதி..!! சிக்கியது எப்படி..?

You May Like