திமுக அமைச்சர் பங்கேற்ற விழாவில் இப்படியா..? தேசியக்கொடிக்கு அவமரியாதை, மின்சாரம் துண்டிப்பு..!! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்..!!

Chengalpattu 2025

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.


இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி காலை 10 மணி தொடங்கவிருந்த நிலையில், மாணவ – மாணவிகள் அனைவரும் வெயிலில் காத்திருந்தனர். ஆனால், காலை 10.30 மணிக்கு அமைச்சர் தாமோதரன் பள்ளிக்கு வந்தார்.

அந்த சமயத்தில், பள்ளியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நிகழ்ச்சி மேடைக்கு வராமல் சுமார் 20 நிமிடங்களாக பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அமைச்சர் காத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வந்த பின்னும் மின்சாரம் வராததால் அவரும் தலைமை ஆசிரியர் அலுவலகத்திலேயே காத்திருந்தார். பின்னர், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, மின்சாரம் வழங்கப்படும்.

இதையடுத்து, அமைச்சரும், ஆட்சியரும் விழா மேடைக்கு வந்த நிலையில், கொடியேற்று நிகழ்வும் நடைபெற்றது. அப்பொழுது அமைச்சர் தா.மோ அன்பரசனும், ஆட்சியரும் தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் வைத்துவிட்டு சென்றனர். தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் தான், கொடி தலைகீழாக இருந்ததை கவனித்தனர். பின்னர், உடனடியாக அங்கிருந்த ஆசிரிய பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, கொடி பாட்டும் பாடி முடிக்கப்பட்டது .

கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய பாட்டை, கொடியை சரி செய்து கொண்டிருக்கும்போது பாடப்பட்டதும், கொடியை தலைகீழாக அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஏற்றியதும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More : “கன்னி பெண்களை ஆண்கள் எதிர்பார்க்கக் கூடாது”..!! அப்படினா இந்த டீல் ஓகேவா..? பிரியங்கா சோப்ராவை வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

CHELLA

Next Post

பாகிஸ்தானில் திடீரென அதிர்ந்த பூமி.. இதான் சாக்குனு சிறையில் இருந்து தப்பிய 216 கைதிகள்..!!

Tue Jun 3 , 2025
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சி சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர். பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் […]
prisoners escaped

You May Like