ரோகிணியின் நாடகத்துக்கு அளவில்லையா..? பாயிண்டை பிடித்த முத்து..! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்..

siragadika asai

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா வீட்டை விட்டு கிளம்புகிறாள். அம்மா வீட்டிற்கு சென்ற மீனா கதறி அழுகிறார். இதனை பார்த்த அவர் நீ எதுவுமே காரணம் இல்லாமல் செய்ய மாட்டா, நீ நிம்மதியா தூங்கு எல்லாமே சரியாகிடும் என்று சொல்கிறார்.


மீனா வீட்டை விட்டு கிளம்பியது நல்லது என நினைத்த ரோகிணி காபி, சமையல், வீடு கூட்டுவது என அனைத்தையும் செய்கிறார். இதனை மொத்த குடும்பமும் ஆச்சரியமாக பார்க்க விஜயா மட்டும் ரோகிணிக்கு சப்போர்ட் செய்கிறார். மீனா இந்த வீட்டிற்கு மீண்டும் வராமல் இருக்கதான் ரோகிணி இதெல்லாம் செய்கிறாள் என முத்து கூறுகின்றான். உடனே ரோகிணிக்கும் முத்துக்கு சின்ன வாக்குவாதம் தொடங்குகிறது.

குடும்பத்தினர் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் ரோகிணி மீது முத்துக்கு சந்தேகம் வருகிறது. அண்ணாமலையிடம் பேசிய முத்து இதுவரை எவ்வளவோ பிரச்சனை வந்து மீனா வீட்டை விட்டு சென்றதில்லை, தற்போது ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு வெளியேறியிருக்கிறார். அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பேன் என்று கூறுகிறார். இதனை கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.

மறுபுறம் சத்யா சிந்தாமணி மகள் என்று தெரியாமல் வீட்டில் நடக்கும் கஷ்டத்தை பகிர்ந்து கொள்கிறான். அவளும் மீனாவை நினைத்து வருத்தப்படுகிறார்.  அப்போது சத்யாவை பார்க்கவந்த முத்து, மீனா ஏதாவது சொன்னாலா என்று கேட்கிறான். இல்லை என்ன பிரச்சனை என்று சத்யா கேட்க நடந்த விஷயத்தை முத்து கூறுகிறார். இதற்காகவெல்லாம் அக்கா வீட்டிற்கு வரமாட்டாரே என்று சத்யா கூற,

ஆமாம் டா ஊருக்கு போனதில் இருந்தே மீனா ஒருமாதிரி இருக்கா என்று கூறிவிட்டு செல்கிறார்.  இதையடுத்து என்ன ஆனது? மீனாவை சமாதானப்படுத்தி முத்து மீண்டும் அழைத்து வந்தாரா? உண்மை அனைவருக்கும் தெரிய வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Read more: 12,000 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வெடித்த எத்தியோப்பியா எரிமலை.. நேரில் பார்த்தவர்கள் சொன்ன பகீர் தகவல்..!

English Summary

Isn’t Rohini’s drama enough? Muthu caught the point! Sirakatika Aasi serial update..

Next Post

'பல நூற்றாண்டுகளின் காயங்கள் இன்று குணமானது': ராமர் கோவிலில் காவி கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி பேச்சு..

Tue Nov 25 , 2025
அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராமர் கோவில் உச்சியில் இன்று காவி கொடியை கொடியேற்றினார்.. இந்த கொடி 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது…. கொடி வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்ட சிகரம் மீது ஏற்றப்பட்டுள்ளது.. கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை […]
modi ayodhya

You May Like