ஈரானின் தப்ரிஸ் இராணுவ விமான நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் ஈரான் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் இராணுவத் தலைவர் மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட உயர்மட்ட நபர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
இதை தொடர்ந்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இதற்கு பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.. மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் போர் அறிவிப்பிற்குச் சமம் என்று ஈரான் அறிவித்தது. மேலும் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
முக்கிய இலக்குகளில் ஒன்று நடான்ஸ் அணுசக்தி நிலையம் ஆகும. இங்கு மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்தது, கெர்மன்ஷா, லோரெஸ்தான் மற்றும் தெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவசர சேவைகள் குவிக்கப்பட்டுள்ளன, மேலும் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானிய இராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
ஈரானை தாக்கிய பிறகு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில், அவர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரித்துள்ளார். “ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அரசு நடத்திய முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் உடனடி காலக்கெடுவில் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.
ஈரான் மீதான தனது நாட்டின் தாக்குதல்கள் அதன் அணுசக்தி உள்கட்டமைப்பு, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் அதன் பல இராணுவத் திறன்களை சேதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்த நிலையில் ஈரானின் தப்ரிஸ் இராணுவ விமான நிலையத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வடமேற்கு ஈரானில் புதிய சுற்று குண்டுவெடிப்புகள் கேட்டதாக அரசு ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, கிழக்கு அஜர்பைஜானில் புதிய குண்டுவெடிப்புகளுக்கு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பெர்லினில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.