இஸ்ரேல் மீது தாக்குதல் தொடர்ந்தால் ‘தெஹ்ரான் பற்றி எரியும்’.. ஈரானுக்கு இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை..

pic 1 1749897603 1

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘தெஹ்ரான் பற்றி எரியும்’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஈரானை எச்சரித்துள்ளார்..

ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் “தெஹ்ரான் பற்றி எரியும்” என்று அவற் எச்சரித்துள்ளார். நேற்று காலை ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நேற்றிரவு முழுவதும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து காட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த போது ஐடிஎஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் மற்றும் மொசாட் இயக்குனர் டேவிட் பார்னியாவுடன் பேசிய காட்ஸ், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை நேரடியாக விமர்சித்தார்.. “ஈரானிய சர்வாதிகாரி ஈரான் குடிமக்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வருகிறார்,” என்று காட்ஸ் கூறினார், “குறிப்பாக தெஹ்ரானின் குடியிருப்பாளர்கள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு பெரும் விலை கொடுப்பார்கள்.” என்று தெரிவித்தார்.

ரைசிங் லைன் தாக்குதல்

ரைசிங் லயன் என்ற குறியீட்டு பெயரிலான தனது நடவடிக்கை 9 மூத்த ஈரானிய அணு விஞ்ஞானிகளை வெற்றிகரமாக அழித்ததாக இஸ்ரேலிய இராணுவம் இன்று உறுதிப்படுத்தியது. விஞ்ஞானிகள் ஈரானின் அணு ஆயுதத் திறன்களை மேம்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் “இந்தத் தாக்குதல்கள் துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. அவர்களை அழிப்பது ஈரானிய ஆட்சியின் பேரழிவு ஆயுதங்களைப் பெறும் திறனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும்.” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட முக்கியமான அணுசக்தி நிலையங்களைத் தாக்கி, விரிவான சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஏவுகணை தாக்குதல் மூலம் ஈரான் பதிலடி

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலிய பிரதேசத்தில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. ஆனால் இஸ்ரேலின் இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்கா வழங்கிய இடைமறிப்பான்கள் நாட்டிற்குள் வரும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியது. எனினும் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகள் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.. மத்திய இஸ்ரேல் முழுவதும் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

ஈரான் நடத்திய தாக்குதலால், 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், இஸ்ரேலின் தாக்குதல்களில் 78 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்தார்.

உலகளாவிய கவலை

இதனால் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க அளவிலான ராணுவ ஆதரவுடன் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானிய ஏவுகணைகளை இடைமறிப்பதில் உதவியதாக ஒரு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

பதற்றத்தைக் குறைக்க சர்வதேச அளவில் அழைப்புகள் அதிகரித்து வந்த போதிலும், இரு தரப்பினரும் பதற்றத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரானின் உச்ச தலைவர் காமெனி பழிவாங்குவதாக சபதம் செய்தார், “இந்தப் பெரிய குற்றத்திலிருந்து அவர்கள் பாதுகாப்பாக தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அறிவித்தார். இதனால் பதற்றமான நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

Read More : ஈரான் – இஸ்ரேல் மோதல்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. தூதரகம் வேண்டுகோள்..

English Summary

Israel’s defense minister has warned Iran that if missile attacks on Israel continue, “Tehran will burn.”

RUPA

Next Post

தாய்லாந்தில் தற்காப்பு பயிற்சி.. ஹீரோ அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. இயக்குனர் யார் தெரியுமா?

Sat Jun 14 , 2025
Director Lokesh Kanagaraj will be making his debut as a hero through the film directed by Arun Matheswaran.
Lokesh Kanagaraj

You May Like