ஓடும் காரில் IT நிறுவன மேனேஜர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; CEO உட்பட மூவர் கைது! பகீர் சம்பவம்..!

gang rape

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளரை, அவரது பிறந்தநாள் பார்ட்டிக்குப் பிறகு வீட்டிற்கு விட்டுச் செல்கிறோம் என்ற பெயரில் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதையடுத்து அந்த நிறுவனத்தின் சிஇஓ, ஒரு பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20 அன்று நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட பெண் அந்த இரவு 9 மணியளவில் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். அங்கு இருந்த அனைவரும் மது அருந்தியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் கடுமையாக மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை பாதிக்கத் தொடங்கியபோது, அதிகாலை சுமார் 1.30 மணியளவில், நிறுவனத்தின் சிஇஓ ஜிதேஷ் பிரகாஷ் சிசோடியா, அவரது பெண் சக பணியாளர் மற்றும் அவரது கணவர் கவுரவ் சிரோஹி ஆகியோர், வீட்டிற்கு விட்டுச் செல்கிறோம் என்று கூறி அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

காரை ஓட்டியது அந்த பெண் நிர்வாகத் தலைவர் தான். பயணத்தின் போது, அவர்கள் வழியில் ஒரு கடையில் நிறுத்தி சிகரெட் போன்ற பொருளை வாங்கி, அதை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை எடுத்துக்கொண்ட பிறகு அவர் மயக்க நிலையில் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த நாள் காலை விழித்தபோது, தன்னிடம் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்பதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் பயன்படுத்திய காரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜிதேஷ் பிரகாஷ் சிசோடியா உதய்ப்பூரின் ஷோபாக்புரா பகுதியில் உள்ள ஜிகேஎம் ஐடி நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அவர் ஸ்கை மரினா அபார்ட்மெண்ட் என்ற உதய்ப்பூரின் மிகப் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த குடியிருப்பில் வசித்து வருகிறார். பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஹிதவாலா அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Read More : 19 வயதிலேயே 8 திருமணங்கள்; திருமணமாகாத இளைஞர்களை பைத்தியம் பிடிக்க வைத்த பெண்; மிரண்டு போன போலீசார்..!

RUPA

Next Post

6 பேர் பலி; 20 பேர் காயம்..! வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு மசூதியில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பு.. சிரியாவில் சோகம்..!

Fri Dec 26 , 2025
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஒரு மசூதியில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடிய குண்டுவெடிப்பு, அலவைட் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஹோம்ஸின் வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-காத்ரி தெருவில் உள்ள அலி பின் அபி தாலிப் […]
syria n

You May Like