தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. ரூ.58,500 சம்பளத்தில் மீன்வளத் துறையில் வேலை..!

tn govt jobs 1

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன்பண்ணையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் (Fisheries Assistant) பணியிடங்களை நிரப்ப மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்: மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

  • ஆதிதிராவிடர் (இருபாலர்) – 2 இடங்கள்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (இருபாலர்) – 1 இடம்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (பெண்) – 1 இடம்
  • பிற்படுத்தப்பட்டோர் (பெண்) – 1 இடம்
  • பிற்படுத்தப்பட்டோர் (இருபாலர்) – 1 இடம் (ஆதரவற்ற விதவை)
  • பொதுப்போட்டி (பெண்) – 1 இடம்
  • பொதுப்போட்டி (இருபாலர்) – 1 இடம் (கலப்பு திருமணம்)

பெண் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் அதே இனச்சுழற்சியில் ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர்.

என்னென்ன தகுதி?

  • தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வலை வீசுதல், பழுதுபார்த்தல் போன்ற திறமைகள் அவசியம்.
  • மீன்வளத் துறை அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிலையத்தில் சான்று பெற்றவர்களுக்கு முன்னுரிமை.

சம்பளம்: ₹15,900 – ₹58,500 (நிலை – 2)

வயது வரம்பு:

ஆதிதிராவிடர்: 37 வயதுக்குள்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர்: 34 வயதுக்குள்

இதர வகுப்பினர்: 32 வயதுக்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பம் சேர வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்),

எண்.5.596, ஔவையார் தெரு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,

தருமபுரி – 636705.

Read more: கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி..? மாமியாரை எரித்து சாம்பலாக்கிய மருமகள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

English Summary

It’s enough to know how to read and write in Tamil.. to get a job in the fisheries sector with a salary of Rs.58,500..!

Next Post

புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க்! 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

Mon Nov 10 , 2025
புதுக்கோட்டையில் ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்புகளை எடுத்துரைத்த முதலமைச்சர், அந்த மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் அறந்தாங்கி வட்டம் நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.. கீரமங்கலப் […]
tamilnadu cm mk stalin

You May Like