ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது இலவசம்!!

பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம்.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் ஸ்போர்ட்ஸ் ஃபிபா உலககோப்பை நிகழ்வை அறிமுகம் செய்கின்றது. இதைக் காண  ஜியோ சினிமா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் நேரலையாக காணலாம். உலக கோப்பையை தமிழ், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா ஆகும்.

Next Post

Red Alert: இன்று 10 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை...! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...!

Fri Nov 11 , 2022
இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருவாரூர் ஆகிய 10 […]
images 2022 11 11T050540.667

You May Like