புதுசா இருக்கே!. தோசை மாவில் நவகிரக குணங்களா?. பிரபஞ்சத்தையே அடக்கி ஆளும் சிறப்பு!. தெரிஞ்சுக்கோங்க!

nine planets dosa 11zon

தென்னிந்தியாவில் பிரபலமான தோசை, உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளது. புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சுவையான தோசை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தோசை மாவில் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆன்மீக நன்மைகளும் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்வோம்.


மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள். பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் பெருமாளுக்கு மிளகு தோசையை பித்தளை பானைகளில் வைத்து படைக்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் பச்சரிசி, கருப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து, தோசை நெய்யில் வார்க்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது. இந்நிலையில், தினமும் சாப்பிடுகின்ற தோசை மாவுக்குப் பயன்படுத்துகின்ற பொருட்களில் நவகிரக குணங்கள் அடங்கியுள்ளன.

தோசை சுட பயன்படும் அக்னி சூரியபகவான்.

மாவில் முக்கியபங்கான அரிசியில் சந்திர பகவானும்

உளுந்தில் சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் உள்ளனர்.

வெந்தயத்தில் புத்தியை சுத்திகரிக்கும் புதன் பகவானும்,

தோசைக்கல் இரும்பில் சனி பகவானும்,

தோசையின் நிறத்தில் செவ்வாய் பகவானும் உள்ளனர்.

தோசையை சாப்பிடும் ஆண்களில் குரு பகவானும்,

பெண்களில் சுக்ர பகவானும் உள்ளனர்.

தோசையின் வட்ட வடிவு இந்த பிரபஞ்சத்தையே குறிக்கிறது.

தோசையை முன்பக்கம் பின்பக்கம் வேக வைப்பது, அதாவது கடிகார வடிவில் சுற்றுவது இந்த உலகம் சுற்றுவதை குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் விசேஷ நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படைத்து வழிபட்டார்கள். இப்பொழுதும் மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள்.

பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் பெருமாளுக்கு மிளகு தோசையை பித்தளை பானைகளில் வைத்து படைக்கிறார்கள். சீரங்கம் கோவிலில் பச்சரிசி, கருப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து, தோசை நெய்யில் வார்க்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது; இதை சாம்பார் தோசை என்று கூறுகிறார்கள்.

Readmore: சனி மூலையில் இந்தப் பொருட்களை வைக்கக்கூடாது!. ஏன் தெரியுமா?

KOKILA

Next Post

செவ்வாய் கிழமை பிறந்தவர்களா நீங்கள்!. அப்போ இந்த 3 சிறந்த குணங்கள் இருக்கனுமே!.

Tue Jun 10 , 2025
பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் […]
tuesday born 11zon

You May Like