உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது பிறப்புறுப்பை தானே சிதைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன கசப்பு மற்றும் விரக்தி காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிய வருகிறது.
காசி ராம் (37) மற்றும் மஞ்சரி தேவி தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்குள் சரியான உறவு இல்லை என்றும், இதனால் தாம் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காசி ராம் கூறியுள்ளார். சம்பவத்தன்று இரவு, மது அருந்தி விட்டு வந்த காசி ராம், மனைவியுடன் இதுபற்றி பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காசி ராம், சமையலறையில் இருந்த கத்தியால் தனது உறுப்பை தானே அறுத்து கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி, துண்டிக்கப்பட்ட உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தினர். தற்போது காசி ராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதற்கிடையே, காசி ராமின் மனைவி மஞ்சரி தேவி தன் மீதான புகாரை மறுத்து உள்ளார். தனது கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அன்றைய தினம் அவர் போதையில் இருந்ததால் தான் தாம் அவருடன் பேசவில்லை என்றும் கூறி உள்ளார். தற்கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குடும்ப பிரச்சனையா அல்லது மது போதையில் நடந்த விபரீதமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ஆண்களே..!! தாம்பத்திய உறவில் ‘கிங்’காக இருக்கணுமா..? ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள்..!!



