அதிகாலையிலேயே ஆடிப்போன ஜம்மு-காஷ்மீர்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..!!

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். முன்னதாக, லடாக்கின் லே மாவட்டத்தில் இருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2.16 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாலையில் இந்த இரு நில நடுக்கங்கள் ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து லடாக்கின் வடகிழக்கே 271 கி.மீ தொலைவில் நேற்று இரவு 9.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், நேற்று இரவு 9.55 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட 7-வது நிலநடுக்கம் இதுவாகும். இவ்வாறாக கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, நேற்று பிற்பகல் 2 மணி முதல் இன்று அதிகாலை வரையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

CHELLA

Next Post

செல்போன் செயலியால் வெடித்த சண்டை..!! பெற்ற மகனை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தை..!! நடந்தது என்ன..?

Sun Jun 18 , 2023
டெல்லி மாநிலம் ஐபி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் அசோக் சிங் (64). இவர், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு மனைவியும், ஆதித்தியா சிங் என்ற 23 வயது மகனும் உள்ளனர். இவரது மகன் ஆதித்தயா குருகிராம் பகுதியில் கம்ப்யூடர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தந்தை அசோக் சிங் சமீபத்தில் […]
Porn Videos Phone

You May Like