ஜிப்மர் மருத்துவமனையில் வேலை.. ஆரம்ப சம்பளமே ரூ. 67,700.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

job 5

புதுச்சேரியில் அமைந்துள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) பல்துறை சீனியர் ரெசிடண்ட் பதவிகளுக்கு 66 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணியிடங்களுக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


பணியின் விவரங்கள்: அனஸ்தீசியாலஜி, கிரிடிகல் கேர், அவசர சிகிச்சை, பொது மருத்துவம், மைக்ரோபயோலாஜி, குழந்தைகள் மருத்துவம், கிளினிக்கல் இம்யூனாலஜி, நியோனாட்டாலஜி, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட பல்துறைகள்.

தகுதிகள்:

* MD/ MS/ DNB முதுகலை மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும்

* விண்ணப்பதாரர்கள் 03.11.2025 தேதியின்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* SC/ST: 5 வருட தளர்வு

* OBC: 3 வருட தளர்வு

* மாற்றுத்திறனாளிகள்: 10–15 வருட தளர்வு

சம்பளம்: தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 7வது CPC அடிப்படையில் ரூ. 67,700 அடிப்படை சம்பளம் பெறுவர், இதனுடன் மேலதிக செலவினங்கள் இணைக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
  • நேர்காணல் நவம்பர் 7 மற்றும் 8, 2025 அன்று நடைபெறும்.
  • தகுதியுள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது..? விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணைப்பில் உள்ள கூகுள் படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500 (SC/ST: ரூ.250, மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லாது)

விண்ணப்பம் நவம்பர் 3, 2025 மாலை 4:30 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வாய்ப்பு, பல்துறை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பாகும்.

Read more: ரைத்தா பிரியர்களே.. தயிர் மற்றும் வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

English Summary

JIPMER Hospital is going to fill 66 vacancies for the posts of Multi-Disciplinary Senior Resident.

Next Post

நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?

Wed Oct 22 , 2025
மழைக்காலம் தீவிரமடையும் காலகட்டத்தில், இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மின்னல் எப்போது, எங்கே, எப்படி தாக்கும் என்பதைக் கணிக்க இயலாவிட்டாலும், வானிலை முன்னறிவிப்புகளைக் கவனிப்பதன் மூலம் உங்கள் பகுதியில் ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம். திறந்த வெளியில் சிக்கிக் கொண்டால் : திறந்தவெளிகளில் தனியாக இருந்தால், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படி செல்ல முடியாத சூழலில், உங்கள் […]
Thunder 2025 1

You May Like