கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
ஈப்பு ஓட்டுநர் | 3 | அதிகபட்சம் 34 | ரூ.19,500 – 62,000 |
இரவுக்காவலர் | 5 | அதிகபட்சம் 34 | ரூ.15,700 – 50,000 |
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
ஈப்பு ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 அனுபவம் இருக்க வேண்டும். |
இரவுக்காவலர் | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கோவை – 641018
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2022 மாலை 5.45 வரை