தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலை.. ரூ. 59,900 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

job 2

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

மொத்த காலியிடங்கள்: 1,794

பணியின் பெயர்: கள உதவியாளர் (Field Assistant)

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் (TANGEDCO)

கல்வித் தகுதி: தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சிக்கான குழுமம் (National Council for Training in Vocational Trade) வழங்கிய பின்வரும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்: தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate).

வயது வரம்பு: தேர்வர்கள் 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிபட்ச வயது வரம்பு 32 ஆகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 34 வரையும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 37 வரையும் சலுகை கொடுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: நிலை 2ன் கீழ் ரூ.18,800 முதல் ரூ. 59,900 வரை சம்பளம் வழங்கப்படும்..

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தாள்களைக் கொண்டது. தாள்-Iல் தமிழ் மொழி, பொது அறிவு, திறறைவு தொடர்பாக 100 கேள்விகள் இடம்பெறும். தாள் – IIல் தொழிற்பயிற்சி பாடத் தாளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? தேர்வர்கள் www.tnpscexams.in
என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய, தளத்தில் உள்ள தமிழ் / ஆங்கில இணைப்பைக் கிளிக் செய்யலாம்.

Read more: 1 நிமிடத்தில் ரூ.1 லட்சம்..! 8 கோடி PF பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விவரம் இதோ..!

English Summary

Job at Tamil Nadu Electricity Distribution Corporation.. Salary up to Rs. 59,900.. Apply immediately..!

Next Post

ஆண்ட்டியை விட்டு வைக்காத இளைஞன்..!! உண்மை தெரிந்தும் ஓயாத உல்லாசம்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!

Thu Sep 4 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர். ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் […]
rape 1

You May Like