திருத்தணி முருகன் கோயிலில் வேலை.. தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. ரூ.50,400 சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..

job 2

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


பணியின் விவரங்கள்:

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்:

  • கூர்க்கா – ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
  • இரவு காவலர் – ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
  • மிருதங்கம் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
  • புஜங்கம் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
  • வேத பாராயணம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
  • குடைக்காரர் – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
  • மாலைக்கட்டி – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
  • தமிழ்ப்புலவர் – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
  • சமய பிரசங்கி – ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
  • சித்த மருத்துவர் – ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
  • ஓட்டுநர் – சம்பள விவரம் பின்னர் அறிவிக்கப்படும்
  • செவிலியர் – ரூ.14,000 (நிலையான மாதச் சம்பளம்)
  • கணினி இயக்குபவர் – ரூ.15,000 (நிலையான மாதச் சம்பளம்)

அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில்:

  • நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
  • தூய்மை பணியாளர் – ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
  • தட்டச்சர் – ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை
  • பலவேலை – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

அருள்மிகு சந்தானவேணுகோபாலபுரம் சுவாமி திருக்கோயில்:

  • பலவேலை – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
  • அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில்:
  • நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
  • காவலர் – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

அருள்மிகு வடாரண்பேஸ்வர சுவாமி திருக்கோயில்:

  • தட்டச்சர் – ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை
  • மேளம் – ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்:

நாதஸ்வரம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

வயது வரம்பு: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் 45 வய்து மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

* பெரும்பாலான பதவிகளுக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.சில பதவிகளுக்கு அந்தந்த பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி அவசியமாகும்.

* இரவு காவலர், குடைக்காரர், ஓட்டுநர், தூய்மை பணியாளர், பல வேலை, காவலர் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி தேவை.

* மிருதங்கம், புஜங்கம், வேத பாராயணம், நாதஸ்வரம், மேளம் ஆகிய கலைஞர் பணியிடங்களுக்கு சமய நிறுவனம்/ அரசு நிறுவனம்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் இசைப் பள்ளியில் அந்தந்த கருவிக்கான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* தமிழ்ப் புலவர் பதவிக்கு தமிழில் B.Lit அல்லது M.A/M.Lit ஆகியவை முடித்திருக்க வேண்டும்.

* சமய பிரசங்கி பதவிக்கு ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் 2 ஆண்டு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

* சித்த மருத்துவர் பதவிக்கு சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பும் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

* ஓட்டுநர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் அவசியமாகும். 1 வருடம் அனுபவம் தேவை.

* செவிலியர் பதவிக்கு நர்சிங் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* கணினி இயக்குபவர் பதவிக்கு கணினி அறிவியலில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பணியிடங்கள் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை ரூ.100 கட்டணம் செலுத்தி கோவில் அலுவலகத்தில் இருந்து பெற்றக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, தபால் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பணிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருத்தணிகை – 631 209.
திருவள்ளூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.11.2025.

Read more: Flash : விஜய்யையும் அடித்து கொல்ல வாய்ப்பு.. 41 பேரை அடித்தே கொன்றனர்.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்து!

English Summary

Job at Thirutani Murugan Temple.. If you can read and write in Tamil, it is enough.. Salary Rs.50,400..!! Apply immediately..

Next Post

Breaking : 13-ம் தேதி கரூர் செல்லும் விஜய்? 16 நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு..

Thu Oct 9 , 2025
It has been reported that Vijay will be visiting Karur for 16 days after the Karur tragedy.
vijay karur tvk

You May Like