மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.84,000 சம்பளத்தில் வேலை..!! சலுகைகளும் உண்டு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

BEL JOB 2025

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL)

வகை : மத்திய அரசு

மொத்த பணியிடங்கள் : 20

பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு)

கல்வித் தகுதி :

* இன்ஜினியர் பணிக்கு மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல் துறைகளில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* சூப்பர்வைசர் பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 22 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* அரசு விதிமுறைகளின்படி, SC/ST, OBC மற்றும் PwBD பிரிவினருக்கு தளர்வு உண்டு.

சம்பளம் :

இன்ஜினியர் – மாதம் ரூ.84,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

சூப்பர்வைசர் – மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

தேர்வு செய்யப்படும் முறை :

* எழுத்துத் தேர்வு

* நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.06.2025

விண்ணப்பிப்பது எப்படி..?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை “Sr. Manager / HR – IR & Rectt., HR department, 24 Building, BHEL,
Thiruverumbur, Tiruchirappalli – 620014″
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Read More : அடி தூள்..!! வாடிக்கையாளர்கள் நிம்மதி..!! இனி மினிமம் பேலன்ஸ் பராமரிக்க தேவையில்லை..!! கனரா வங்கி அதிரடி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

பெரும் சோகம்!. 1000 கி.மீ வேகத்தில் சென்ற பேருந்து கோர விபத்து!. 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு!. நைஜீரியாவில் அதிர்ச்சி!

Mon Jun 2 , 2025
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]
nigeria bus accident 11zon

You May Like