பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!! உடனே விண்ணப்பிங்க..

job 5

பரோடா வங்கியின் கீழ் செயல்படும் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தில், வணிக மேம்பாட்டு மேனேஜர் (Business Development Manager) பதவிக்கான 70 காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன.


தகுதிகள் என்னென்ன?

* இப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* நிதி சார்ந்த சேவைகளில் குறைந்தது 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் திறன், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை திறன் மற்றும் பேசும் திறன் கொண்டிருப்பது சிறப்பாகும்.

பணிப் பொறுப்புகள்:

  • வாடிக்கையாளர்களுக்கான Demat மற்றும் Trading கணக்குகளை துவங்குதல்
  • அவற்றை ஊக்குவித்து வணிகத்தை விரிவுபடுத்துதல்
  • புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல்
  • வங்கியும் வாடிக்கையாளர்களும் இடையே நெருக்கமான உறவை பராமரித்தல்

சம்பளம்: சம்பளம் குறித்த விவரம் இடம்பெறவில்லை. இருப்பினும், தேர்வு செய்யப்படும் நபர்களின் அனுபவம் மற்றும் திறனுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களில் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ‘careers@bobcaps.in’ என்ற இமெயில் முகவரியில் தங்களில் சுயவிவரங்கள் அடங்கிய படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிக்கு கடைசி தேதி குறிப்பிடவில்லை. பணியிடங்கள் நிரப்பப்படும் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என கருதப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்வையிடவும்.

Read more: EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கீங்களா..? தவணை செலுத்த தவறினால் உங்கள் ஃபோன் வேலை செய்யாது..!!

English Summary

Job in Bank of Baroda.. Great opportunity for degree holders..!! Apply immediately..

Next Post

பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஏன் ஓட்டை இருக்கிறது தெரியுமா?. காரணம் இதுதான்!. ஆச்சரிய தகவல்!

Wed Sep 17 , 2025
பிளாஸ்டிக் நாற்காலியின் பின்புறத்தில் சிறிய துளை இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால், அவை இருப்பதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. உண்மையில் அந்த துளை அங்கே இருப்பதற்கு இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன . ஒரு காரணம் நாற்காலிகளை அடுக்கி வைப்பது தொடர்பானது.பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும்போது, ​​அவை நாற்காலிகளுக்கு இடையில் ஒரு காற்றுப் பையை உருவாக்குகின்றன, இதனால் நாற்காலிகள் ஒன்றோடொன்று உறிஞ்சப்படுவதுபோல் (suction effect) உணரப்படுகிறது, இதுவே […]
plastic chair hole

You May Like