JOB: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.. ரூ. 1,16,200 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..

job 2

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்;

உதவி பொறியாளர் – 1

இளநிலை உதவியாளர் – 2

சீட்டு விற்பனையாளர் – 3

தமிழ் புலவர் – 1

உதவி மின்பணியாளர் – 2

பாரா – 6

குருக்கள் அர்ச்சகர் உபகோயில் – 1

காவலர் – 1

உதவி பரிச்சாரகர் – 2

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதைப் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதே போன்று, 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிவாரியான தகுதிகள் விவரம்:

உதவி பொறியாளர்: சிவில் பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு A மற்றும் B-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியியல் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்:

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி

சீட்டு விற்பனையாளர்:

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • அரசு தட்டச்சு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

தமிழ் புலவர்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Lit, அல்லது BA / MA (தமிழ்), அல்லது M.Lit, திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்

உதவி மின்பணியாளர்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மின் / மின் கம்பிப் பணியாளர் ITI சான்றிதழ், மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பாரா: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

குருக்கள் / அர்ச்சகர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு படிப்பு மேற்கொண்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.

காவலர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

உதவி பரிச்சாராகர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கோயில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம், பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

  • உதவி பொறியாளர் பதவிக்கு ரூ.36,700 – 1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் மற்றும் தமிழ் புலவர் பதவிகளுக்கு ரூ.18,500 முதல் 58,600 சம்பளம்
  • உதவி மின்பணியாளர் பதவிக்கு ரூ.16,600 – 52,400
  • பாரா பதவிக்கு ரூ.15,900 – 50,400
  • குருக்கள் அர்ச்சகர் உபகோயில் மற்றும் காவலர் பதவிகளுக்கு ரூ.11,600 – 36,800 சம்பளம்
  • உதவி பரிச்சாரகர் பதவிக்கு ரூ.10,000 – 31,500 சம்பளம்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.

Read more: மதியம் கொஞ்ச நேரம் தூங்கினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..? – ஆய்வில் வெளியான தகவல்

English Summary

Job in Hindu Religious Charities Department.. Salary up to Rs. 1,16,200..!!

Next Post

“புலிக்கு வாலா இருக்கலாம்.. எலிக்கு தலையா இருக்கக் கூடாது..” செங்கோட்டையன் குறித்து ஜெயகுமார் விமர்சனம்..!

Fri Nov 28 , 2025
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய […]
sengottaiyan vijay jayakumar

You May Like