இந்தியன் ரயில்வேயில் வேலை.. ரூ.45,000 சம்பளம்.. டிகிரி போதும்! விண்ணப்பிக்க ரெடியா..?

railway 2025

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய அளவில் செக்ஷன் கண்ட்ரோலர் (Section Controller) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடங்கள்: ரயில்வேயில் செக்‌ஷன் கண்ரோளர் (RRB Section Controller) பதவிக்கு உத்தேசமாக 368 காலிப்பணியிடங்கலுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சம்பளம்: இப்பதவிக்கு 7வது ஊதிய குழுவின்படி, நிலை 6 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.35,400 ஆகும். மேலும், கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் இணைந்து மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: ரயில்வே செக்‌ஷன் கண்ரோளர் பதவிக்கு 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 முதல அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்ரின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025.

Read more: பிரிந்து சென்ற முதல் மனைவி.. இரண்டாவது திருமணத்தில் இளைஞனுக்கு இப்படியா நடக்கனும்? 2 உயிர் போச்சே..!

English Summary

Job in Indian Railways.. Degree is enough! Salary of Rs.45,000.. Ready to apply..?

Next Post

பருப்பு கருகிவிட்டால், இனி தூக்கி எறிந்து வீணாக்காதீர்கள்!. இந்த 3 வழிகளில் மீண்டும் பயன்படுத்தலாம்!.

Wed Sep 10 , 2025
நீங்கள் பிரஷர் குக்கரில் சமைத்தாலும் சரி, பாத்திரத்தில் சமைத்தாலும் சரி, தண்ணீர் குறைந்துவிட்டால், பருப்பு அடிப்பகுதியில் ஒட்ட ஆரம்பிக்கும். சில நேரங்களில் அதிகமாக சூடாவதால், பருப்பு குக்கரின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு எரிந்துவிடும். பருப்பின் சுவை கசப்பாக மாறும் என்பதால், அத்தகைய பருப்பை பதப்படுத்திய பிறகு சாப்பிடுவது கடினம். கசப்பு வராமல் இருக்க, நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தலாம். வறுத்த பருப்பை மீண்டும் உணவில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். […]
lentils burnt reuse

You May Like