சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களுக்காக புதிய பணியிடங்களை அறிவித்துள்ளது.
பணியிட விவரம்:
டெபியூட்டி மேனேஜர் (தொழில்நுட்ப பிரிவு) – 34
வயது வரம்பு: டெபியூட்டி மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 34 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வருடங்கள், முன்னாள் ராணுவத்தினர் 5 வருடங்கள் என தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், கேட் தேர்வில் சிவில் பொறியியல் பிரிவில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
- 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- திட்டமிடுதல், வடிவமைத்தில், அதனை செயல்படுத்துதல், மேற்பார்வை ஆகியவை பணியின் தன்மை ஆகும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட் மதிப்பெண்களை பதிவிட வேண்டும். கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நேர்காணல் ஆகியவை கிடையாது. தேர்வு செய்யப்படும் நபர்கள் வெவ்வெறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nhidcl.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2025.



