கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 பிரதம சங்கங்களின் மூலம் நாள்தோறும் 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆவினில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : ஆவின்
பணியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர்
பணியிடம் : கன்னியாகுமரி மாவட்டம்
வயது வரம்பு : 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி : கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சொந்தமாக இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும்.
எப்படி சேருவது..?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், தங்களது முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 11ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடக்கும் நியமன தேர்தலில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு, “கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில்” என்ற முகவரியில் நடைபெறுகிறது.