தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்–இல் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் மற்றும் சம்பளம்:
மேளக்குழு: இசை பயிற்சி சான்றிதழ் தேவை. ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700
பரிசாரகர்: பிரசாதம் தயார் மற்றும் விநியோகம் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800
அலுவலக உதவியாளர்: குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி. ஊதியம்: ரூ.12,600 – ரூ.39,900.
அத்யாபகம்: ஆகம பள்ளி/வேத பாடசாலையில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ். ஊதியம்: ரூ.11,600 – ரூ.36,800
பகல் காவலர்: இரவு காவலர் (2 இடங்கள்),
திருவலகு: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.10,000 – ரூ.36,800.
வயது வரம்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வாக நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது? விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளும், ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் ஒட்டிய சுய விலாச ஒப்புகை அட்டையும் இணைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண்.6, எம்.என்.பி. கோயில் தெரு,எழும்பூர், சென்னை – 600008.விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக உயர்வு.. முதலிடத்தில் கேரளா..!!