தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா..? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை இருக்கு.. ரூ.36,800 சம்பளம்..!!

job 2

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்–இல் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிடங்கள் மற்றும் சம்பளம்: 

மேளக்குழு: இசை பயிற்சி சான்றிதழ் தேவை. ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700

பரிசாரகர்: பிரசாதம் தயார் மற்றும் விநியோகம் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800

அலுவலக உதவியாளர்: குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி. ஊதியம்: ரூ.12,600 – ரூ.39,900.

அத்யாபகம்: ஆகம பள்ளி/வேத பாடசாலையில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ். ஊதியம்: ரூ.11,600 – ரூ.36,800

பகல் காவலர்: இரவு காவலர் (2 இடங்கள்),

திருவலகு: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.10,000 – ரூ.36,800.

வயது வரம்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வாக நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

எப்படி விண்ணப்பிப்பது? விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளும், ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் ஒட்டிய சுய விலாச ஒப்புகை அட்டையும் இணைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண்.6, எம்.என்.பி. கோயில் தெரு,எழும்பூர், சென்னை – 600008.விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக உயர்வு.. முதலிடத்தில் கேரளா..!!

Next Post

“இந்த வீடியோவுல இருக்க மாதிரியே பண்ணனும்”..!! இன்ஸ்டா ஆண்ட்டிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி வைத்து பாலியல் தொல்லை..!!

Sat May 31 , 2025
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் 42 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண். இவர், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஓராண்டுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தோம். திடீரென ஒருநாள் என் மீது சந்தேகம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் நீ யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்றும் […]
Insta 2025 1

You May Like