தேசிய புலனாய்வுத் துறையில் வேலை.. ரூ.81,000 சம்பளம்.. கல்வித்தகுதி, கடைசி நாள் எப்போது..?

job 2

புலனாய்வு துறையில் (Intelligence Bureau) பணி செய்ய விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப பிரிவில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer – JIO) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள் – 394

பொதுப் பிரிவு – 157, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 32, ஒபிசி – 117, எஸ்சி – 60, எஸ்டி – 28 என நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாது.

வயது வரம்பு: ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 27 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.

அரசு வழங்கியுள்ள தளர்வுகள்:

  • SC / ST பிரிவினருக்கு – 5 வருடங்கள்
  • OBC பிரிவினருக்கு – 3 வருடங்கள்
  • அரசு துறையில் பணியாற்றுவோர் – அதிகபட்சம் 40 வயது வரை
  • விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
  • கணவரை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், அல்லது கணவரை சட்டப்படி பிரிந்து வாழும் பெண்களுக்கு சிறப்பு தளர்வுகள் உண்டு.
  • SC / ST பெண்கள் – 40 வயது வரை
  • OBC பெண்கள் – 38 வயது வரை
  • பொது பிரிவு பெண்கள் – 35 வயது வரை

கல்வித்தகுதி: புலனாய்வு பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ கணினி பொறியியல்/ கணினி பயன்பாடு ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கல்/கணினி அறிவியல்/ இயற்பியல்/ கணிதம் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு (BCA) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer) பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, நிலை – 4 (Pay Level – 4) கீழ் சம்பளம் வழங்கப்படும்.

  • அடிப்படை சம்பளம்: ₹25,500 முதல் அதிகபட்சம் ₹81,000 வரை
  • சிறப்பு பாதுகாப்பு தொகை: அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக 20% வழங்கப்படும்
  • விடுமுறை நாட்களில் பணியாற்றினால்: தனியாக கூலி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜூனியர் புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

1.எழுத்துத் தேர்வு (Written Exam)

  • கொள்குறி (Objective Type) முறையில் நடைபெறும்.
  • மொத்த மதிப்பெண்கள் – 100.
  • இதில் Cut-off மதிப்பெண்களை எட்டுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

2.திறன் தேர்வு & நேர்காணல் (Skill Test & Interview)

  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

3.மருத்துவ பரிசோதனை (Medical Examination)

  • திறன் தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்களின் உத்தேச பட்டியல் (Provisional List) வெளியிடப்படும்.
  • அதன் பின்னர் மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்றவர்களின் இறுதி தேர்வு பட்டியல் அறிவிக்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாகவே பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? . இதற்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். விண்ணப்பம் ஆகஸ்ட் 23 தேதியே தொடங்கிய நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: தீபாவளி பரிசு இல்லை… தசராவுக்கு முன்பே ஜாக்பாட்! மோடி அரசு சொல்லப் போகும் குட்நியூஸ்..

English Summary

Job in the National Intelligence Department.. Salary up to Rs. 81,000..

Next Post

"அவன் தான் சார் என் பொண்ண கொன்னுட்டான்" வரதட்சணை கொடுமையால் புதுமணப் பெண் உயிரிழப்பு..!!

Mon Aug 25 , 2025
The suspicious death of a 22-year-old woman in Dwarka area of ​​the capital Delhi has caused great shock.
marriage death

You May Like