ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு.. 385 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..?

job 2

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


வயது வரம்பு:

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • பொதுப் பிரிவு: 32 வயது
  • பிசி / எம்பிசி: 34 வயது
  • எஸ்சி / எஸ்டி: 37 வயது

ஈப்பு ஓட்டுநர்

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • பொதுப் பிரிவு: 32 வயது
  • பிசி / எம்பிசி: 34 வயது
  • எஸ்சி / எஸ்டி: 42 வயது

கல்வித்தகுதி:

* அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • விண்ணப்பதாரின் புகைப்படம்
  • விண்ணப்பதாரின் கையொப்பம்
  • வகுப்பு சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • அனுபவம் சான்றிதழின் நகல்
  • ஓட்டுநர் உரிமம் (தேவையிருப்பின்)
  • கல்வித்தகுதி சான்றிதழ்
  • விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வங்கி கணக்கில் வைத்துகொள்ளவும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் ரூ.50 செலுத்தினால் போதும்.

எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 385 காலிப்பணியிடங்களுக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் படிகள்:

* அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள காலிப்பணியிட அறிவிப்பைப் பார்த்து, தகுதி விவரங்களை கவனமாக படிக்கவும்.

* தகுதியுள்ளவர்கள் “Apply” (விண்ணப்பிக்க) என்பதை கிளிக் செய்யவும்.

* உங்கள் பெயர், தந்தை/பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மாவட்டம், முகவரி, மொபைல் எண், இமெயில் போன்ற விவரங்களை சரியாக நிரப்பவும்.

* தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களை (படங்களுடன்) பதிவேற்றம் செய்யவும்.

* Captcha நிரப்பி, OTP மூலம் உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்கவும்.

* விவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, கட்டணம் செலுத்தும் பகுதிக்கு செல்லவும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

* கட்டணம் வெற்றிகரமாக செலுத்திய பிறகு, விண்ணப்பப் படிவம் மற்றும் ரசீதை பதிவிறக்கம் செய்து பாதுகாத்துக்கொள்ளவும்.

கடைசி தேதி: ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளிக்கக்கூடாது. போலி சான்றிதழ் அல்லது தகவல் கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Read more: Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்வு.. வெள்ளி விலையும் புதிய உச்சம்..!

English Summary

Job opportunities in the Rural Development Department.. 385 vacancies.. How to apply..?

Next Post

"வதந்திகளை பரப்பாதீங்க.. வேதனை அளிக்கிறது.." விரக்தியில் செங்கோட்டையன்.. என்ன விஷயம்..?

Fri Sep 26 , 2025
"Don't spread rumors.. it hurts.." Sengottaiyan said in frustration.. what's the matter..?
9237590 sengottaiyan

You May Like