+2, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!… மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் மூலம் 374 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


கண்காணிப்பு பொறியாளர், தயாரிப்பு அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பொறியாளர், உதவியாளர், மூத்த கணக்காளர், ஜூனியர் கணக்காளர், விற்பனை நிர்வாகி, உதவி அங்காடி அதிகாரி, தொழில்முறை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், வரவேற்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன் உள்பட பல்வேறு பணி இடங்கள் நிரப்பட உள்ளது. 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 22-4-2023 அன்றைய தேதிப்படி பதவியின் தன்மைக்கேற்ப 27, 30, 35, 40, 50 போன்றவை வயது வரம்புகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-5-2023 ஆகும்.

1newsnationuser3

Next Post

கோடைக்காலம்!... நீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?... சில எளிய டிப்ஸ் உங்களுக்காக!

Thu May 11 , 2023
கோடை காலம் என்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடை காலத்தில் மக்கள் அடிக்கடி சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தண்ணீர் பிரச்சனை . இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே தண்ணீரை சேமிப்பது அவசியம். இல்லையேல் அடுத்த போர் தண்ணீருக்காக மட்டும் இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் […]
summer

You May Like