இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனத்துறை பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அறிவிப்பில், இந்த அறிவிப்பின் மூலம் தோராயமாக 150 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி-21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை எழுத 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மதிப்பெண் தகுதிபெற முக்கியமாகும்.
பிப்ரவரி 21ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் https://upsconline.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில், One-time registration (OTR) for examinations of UPSC and online application என்ற பகுதியைத் தேர்வு செய்து, க்ளிக் செய்யவும். முன்பதிவு செய்யாதவர்கள், புதிதாக விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே செய்துள்ளவர்கள், இ- மெயில், மொபைல் எண் அல்லது ஓடிஆர் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர். முதன்மைத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை மட்டும். விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2023 மேலும் விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.