60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடக்க போகும் அதிசயம்…! தவறாமல் இதை பாருங்க…! நாசா தகவல்…!

வியாழன் கோள் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும். 60 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய நிகழ்வானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. அவ்வாறு எதிர் எதிர் திசையில் இது நிகழும் போது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும்.


நாசா விஞ்ஞானி கூற்று படி, வியாழன் கோள் பூமியில் இருந்து 367 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த கோள் நாளை பூமிக்கு அருகே வர இருக்கிறது. நாளை இரவு முழுவதும் வாயு ராட்சதத்தின் கண்கவர் காட்சிகள் கிடைக்கும். வியாழனின் கோள் ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் ஏற்படுகிறது, இதனால் கிரகம் ஆண்டின் மற்ற நேரத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

இதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த அற்புதமான சம்பவம் நிகழ இருக்கிறது. இந்த அரிய நிகழ்வை பைனாகுலர் மூலமாக பார்க்கலாம். வியாழன் கோளின் 4 சந்திரன்களை நீங்கள் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானி ஆடம் கோபெல்ஸ்கி கூறியுள்ளார்.

Vignesh

Next Post

அட்டகாசம்.‌‌.. அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டம்...! மத்திய அரசு ஒப்புதல்...!

Sun Sep 25 , 2022
அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து […]
solar

You May Like